
தமிழகத்தில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பாடு என்று தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு மின்சார துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வு துறையையும் கவனிப்பார்கள். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் இருந்த துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.