தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவர்கள் நான்கு பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது போதை பொருட்களை அதிக விலைக்கு வாங்கி விற்பனைக்காக கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அருண்சுனைமுத்து(22), ராஜ்குமார்(29), மாரிலிங்கம்(24) மற்றும் சன்னத் பெருமாள்((27) ஆகும். எனவே அருண்சுணைமுத்து உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து அமலாக்கத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.