திமுக முக்கிய தலைவர்களின் வீடுகளில் அமலாக துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர் எஸ் பாரதி, அமலாக்கத்துறை சோதனை மூலம் ஒன்றிய பாஜக அரசு எங்களை அச்சுறுத்த நினைக்கிறது. இதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டோம். திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாடுகிறார்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.