பெங்களூரை சேர்ந்த 83 வயதான முதியவர் சூரியநாராயணன். இவர் தான் குடியிருக்கும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார். எந்த அளவிற்கு என்றால் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் சூரிய நாராயணன் அவர்களே இறங்கி தெருவை சுத்தப்படுத்துவது ஓடையில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது என அவரே அனைத்தையும் செய்து விடுவாராம்.

இவ்வாறு அவர் செய்வதனால் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்சனை ஏற்படாது என்று கூறுகிறார். தெருவை தூய்மைப்படுத்துபவர்கள் அதிகம் இங்கு வராததால் தானே இந்த வேலையை செய்வதாக சூரியநாராயணன் கூறியுள்ளார். இவர் இவ்வாறு தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

https://x.com/bengalurupost1/status/1872609308996686323