தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர் யோகி பாபு இதைப் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் ஒரு காமெடி நடிகர். கடைசி வரை காமெடி நடிகராகவே என் வாழ்க்கையை தொடர்வேன். சண்டைக் காட்சிகளில் நடிப்பது உடம்பை மெருகேற்றுவது போன்றவைகள் எனக்கு தேவை கிடையாது.

முதலில் வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தற்போது அதே இடத்திற்கு நான் போய் நிற்கிறேன். நான் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். என்னுடைய இந்த மூஞ்சிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இரவு பகல் பாராமல் படப்பிடிப்புக்கு செல்கிறேன். வேலை இருக்கும்போது ஓய்வைப் பற்றி நினைக்க கூடாது. படப்பிடிப்பு ரத்தானால் என்னுடைய குடும்பத்துடன் வந்து நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் யோகி பாபுவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.