தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை, திருப்புவனம் , மானாமதுரை, காளையார் கோவில் , திருப்பத்தூர், இளையான்குடி மற்றும் தேவகோட்டை வட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.