ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று மரணமடைந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு குறைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்தித்துள்ளார். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என்று குறிப்பிடப்படும் இவர் பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கிய ஒரு இரக்கமற்ற நபர்.

ஒரு கொடூர கொலை காரனுக்கு இந்த விரைவான முடிவு மிகவும் எளிதாக வந்துவிட்டது என்று பலருக்கும் தோன்றலாம் . ஆனால் அவருடைய மரணம் மிகச்சிறந்த கர்மாவாகும் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.