தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் யோகி பாபு. குறிப்பாக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவரின் காமெடி அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கூட ரஜினியுடன் இணைந்து நடித்து கலக்கி இருந்தார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு இன்று அவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நிலைவடைந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகனிடம் ஆறு லட்சத்திற்கான காசோலையை யோகி பாபு வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.