இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசிக்கிறார்கள் .இங்கு குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மற்ற ஊர்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி நியாய விலை கடை கூட இல்லையாம்.
தொழில்நுட்ப நீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில் எங்கள் ஊருக்கு எதுவுமே இல்லை ஒட்டுமொத்தமாக நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்று கிராமம் மக்கள் புலம்புகிறார்கள். அடிப்படை வசதி கூட இல்லாததால் பெண் தர கூட தயங்குவதாக அக் கிராம மக்கள்  நொந்து போய் இருக்கிறார்கள்.