தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சேலத்தில் நடைபெற்ற நிலையில் அதில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர் ஆர் கோபால்ஜி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் நாயன்மார்கள் பிறந்த பூமி என்பதால் இங்கு பிறந்ததற்கு நம் புண்ணியம் செய்துள்ளோம். அதன்பிறகு இந்துக்களில் பல்வேறு மாறுபட்ட பிரிவுகள் இருந்தாலும் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம். இலவச மகளிர் பேருந்து மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டால் போதுமா. அந்த ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்திவிட முடியுமா.?

ஆண்கள் மதுக்கடைகளில் மாதம் 10,000 செலவு செய்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் இல்லை என்றால் அந்த 10,000 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளை படிக்க வைக்கலாம். எனவே டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பெண்கள் அனைவரும் போராட வேண்டும். இந்தியாவை இந்துக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக இந்துக்கள் தான் இந்தியாவில் அதிக அளவில் இருக்க வேண்டும். எனவே இந்துக்கள் குறைந்தது ‌3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்து மக்கள் தொகை அதிகரிக்கும். மேலும் பெண்கள் இந்து மதத்தை காப்பதற்கு இந்து விரோத ஆட்சிகளுக்கு ஓட்டு போடக்கூடாது என்று கூறினார்.