இந்தியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் குறைகிறது என்பதால் எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் பழைய டென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசமாகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மற்ற மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு வளங்களின் இருப்பு மற்றும் வரவு செலவு திட்ட கணக்குகளை நாம் பார்க்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கையின் அடிப்படையில் ஓய்வூதிய பிரச்சனைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால் இந்த வருடம் இறுதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.