
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்ட திருத்தம் வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது