கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பின் இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். கடந்த வருடம் இரண்டாம் காலாண்டில் 54,207 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்த வருடம் அதே காலாண்டில் 28,604 சுற்றுலாப் பயணிகள் தான் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை கைவிட்ட நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் சீன சுற்றுலா பயணிகளை ஈர்க்கத் துவங்கியுள்ளனர். இதற்காக சீனாவின் நான்கு பெரிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்க உள்ளனர். அதன்படி பீஜிங், ஜியான், செங்டு மற்றும் சாங்காய் ஆகிய நகரங்களுக்கு ஜனவரி மாதம் முதல் நேரடி விமானம் இயக்கப்பட இருக்கிறது.