
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எங்களுடைய கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான் என குற்றம் சாட்ட விரும்புகின்றேன்.
என்னுடைய எண்ணத்தை பொருத்தவரை பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் நடந்த போராட்டம் தேவையற்ற போராட்டம் என ஊடகங்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். அந்தப் பகுதியில் இருந்த இஸ்லாமியர் மற்றும் இந்துக்கள் இரு மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக தான் வாழ்ந்து வருவதாகவும் எங்களுக்குள் எந்த விதமான பிரிவும் பிரிவினையும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இது தேவையற்ற பிரச்சனை என்று மக்களே கூறியுள்ளனர். அப்படி என்றால் இந்த பிரச்சனை தேவையற்ற பிரச்சனையாக தான் நாங்கள் கருத வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.