
சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருவர், ஒரு பெரிய முதலையின் மீது அமர்ந்து ஆற்றைக் கடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. மனிதர்களையும், காட்டுயானைகளையும் கூட அச்சுறுத்தக்கூடிய முதலை மீது ஒருவர் சவாரி செய்வது, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த வீடியோ தொடர்பாக, நெட்டிசன்கள் “இது எப்படி சாத்தியம்?”, “இதுதான் உண்மையான தைரியம்” என்று கூறி அதிசயத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதைப் பார்த்து “மிருகங்களுக்கும் அதே அளவு நம்பிக்கையுடன் நடந்து கொள்ள முடியுமா?” என கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக, தண்ணீரில் இருக்கும் முதலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதையும், சிங்கம் கூட தண்ணீரின் அருகில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மை தற்போது வெளியாகியுள்ளது. AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணொளியாக இது நிறுவப்பட்டுள்ளது. Grok AI எனும் ஒரு நுண்ணறிவு மேடையில் இதைச் சிலர் உறுதிப்படுத்தும்படி கேட்டனர். அதற்கு பதிலளித்த Grok AI, “இந்த வீடியோ முற்றிலும் கணினியில் உருவாக்கப்பட்ட படங்களின் (CGI) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது உண்மை அல்ல. பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
இதனால், வைரலாகும் வீடியோக்களை பார்க்கும்போது அவை உண்மையானவையா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பும் நமக்கே இருக்கிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
देखिए सनातन धर्म की ताकत
पुजारी महाराज को मंदिर तक अपनी पीठ पर ले जाता है यह मगरमच्छ।। pic.twitter.com/5PJfCKdAKx— Disha Rajput (@DishaRajput24) June 11, 2025