MBBS சீட் குறித்து உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 mbbs சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத நிலை இருந்தது. இதனை உடனடியாக கைவிடக் கோரி முதல்வர் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து MBBS இடங்கள் குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.