தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கதை திருப்திகரமானதாக இல்லாததால் லைகா நிறுவனம் மற்றும் அஜித் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனால் மன வருத்தத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த விக்னேஷ் சிவன் தற்போது ஒரு புது கதையை தயார் செய்து விட்டதாகவும் அந்த படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே போன்ற படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனை முதன்மை வேடத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏகே 62 படத்திலிருந்து தன்னை நீக்கியதால் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என விக்னேஷ் சிவன் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.