
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில் 4 விரல்களையும் இழந்துள்ளார்.
இருப்பினும் , விடாமுயற்சியோடு முயன்று சாதனை படைத்துள்ளார். இதற்காக தினசரி 4 மணி நேரம் எழுதவும், படிக்கவும் நேரம் செலவிட்டதாக கூறிய அவர், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.