
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது காஷ்மீரோ அல்லது மணிப்பூர் கிடையாது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவதற்கு உத்திரபிரதேச மாநில கும்பமேளாவில் நடந்தது போன்று உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை.
இது தமிழ்நாடு. மாநில சுயாட்சிக் கனவை நினைவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் என மாநில உரிமைக்காக என்னுடைய பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் ஆட்சியின் பார்ட்-1 தான். மேலும் 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடலின் version 2.0 loading என்று கூறினார்.