மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற ஒரு திருமண விழா, புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகப் போர்க்களமாக மாறியது.
திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுப்பதற்காகப் புகைப்படக் கலைஞர் அங்கிருந்த விருந்தினர் ஒருவரைச் சற்றுத் தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். இந்த சாதாரண கோரிக்கை வாக்குவாதமாக மாறி, இறுதியில் இரு வீட்டாருக்கும் இடையே பெரிய கைகலப்பாக உருவெடுத்தது.
उज्जैन में एक विवाह समारोह में वर-वधू पक्ष आपस में भिड़े
राजीव नगर में एक शादी समारोह के दौरान मामूली बात ने अचानक हिंसक रूप ले लिया। वर और वधू पक्ष के लोगों के बीच जमकर मारपीट हुई—लात-घूंसे चले और कुर्सियां-बर्तन तक फेंके गए।
जानकारी के मुताबिक, विवाद तब शुरू हुआ जब शादी की… pic.twitter.com/p5PKnXLwfu— PANKAJ CHOUDHARY (@PANCHOBH) April 30, 2026
இந்த மோதல் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பொருட்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் திருமண மண்டபமே நிலைகுலைந்து போனதுடன், பயந்துபோன விருந்தினர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மகிழ்ச்சியான தருணம் இப்படி வன்முறையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
