சமீபகாலமாக விமானத்தில் செல்லும் பயணிகள் தங்களுக்கு நேரும் கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இண்டிகோ விமானத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஜன்னல் சீட்டுக்காக டிக்கெட் புக் செய்துள்ளார். ஆனால் அவரை ஜன்னல் இல்லாத பேனல் கொண்டு மூடப்பட்ட இடத்தில் அமர வைத்துள்ளனர். இதனால் கோபமான அந்த பயணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் டேய் இண்டிகோ நான் ஜன்னல் சீட்டுக்கு காசு கொடுத்து டிக்கெட் எடுத்தேன். இங்க இருந்த ஜன்னல் எங்கடா என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று சமீபத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 13ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக டிக்கெட் புக் செய்திருந்தார். அவர் உயர் வகுப்பான பிசினஸ் கிளாஸ் டிக்கெட் புக் செய்திருந்த நிலையில் அவருடைய டிக்கெட் கன்ஃபார்ம் ஆனது. ஆனால் அவர் விமானத்தில் ஏறும்போது அவர் புக் செய்த இருக்கையை கொடுக்காமல் அதற்கு பதிலாக சாதாரண எக்கனாமி கிளாசில் உட்கார வைத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர் கண்டனம் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அது பற்றி வெளியிட அவரிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.