இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோர் லண்டனில் பிரிட்டிஷ் அரசர் கிங் சார்ல்ஸ்-ஐ சந்திப்பதற்காக வருகை தந்தபோது எதிர்பாராதவிதமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸ் பகுதியில் அரசர் கிங் சார்ல்ஸை சந்திப்பதற்காக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் சில முக்கிய வீரர்கள் புடை சூழ பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் திடீரென “ஷேம் ஆன் யூ” (Shame on you) மற்றும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இந்த எதிர்பாராத சத்தத்தாலும் கோஷங்களாலும் அதிர்ந்துபோன பாபர் அசாம் மற்றும் சக வீரர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்றனர். இந்தச் சம்பவம் அந்த உயர் மட்டப் பயணத்தின் போது ஒரு விதமான சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது.
محسن نقوی کے خلاف نعرہ بازی, Shame Shame
بابر اعظم اور باقی کھلاڑی بھی ساتھ موجود ہے, وہ بھی حیران ہوگئے, نعرہ بازی کس کے خلاف ہورہی ہے!
جبکہ اصل میں لے, دلیر کشمیری محسن نقوی کا پیچھا کر رہے ہیں!! pic.twitter.com/5kbiRwuLoG— ZEShan ⚫ (@zeshmohmand) September 2, 2026
இந்த எதிர்ப்பிற்கான நேரடிக் காரணம் என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் அந்த வீடியோ மூலமாக முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்ததுடன், அணியில் செய்யப்பட்ட அதிரடியான மாற்றங்கள் மற்றும் சர்ச்சைகளால் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சலசலப்புகளுக்கு நடுவேயும், பாபர் அசாம் மற்றும் அணியினர் அரசர் கிங் சார்ல்ஸைச் சந்தித்து ஒரு கையெழுத்திட்ட மட்டையைப் பரிசாக வழங்கிவிட்டுத் தங்கள் சந்திப்பைத் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
