
தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கத்தில் இருந்து 3000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது. அதை செம்பரம்பாக்கம் ஏரி தாங்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் ஆரஞ்சு போட்டாலும் சரி ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என பதில் அளித்துள்ளார்.