இந்திய பந்து வீச்சு சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்..

மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC Final) நாளை தொடங்க உள்ளது. ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியா   மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் ஏற்கனவே திட்டமிட்டு உள்ளன. இதனிடையே போட்டிக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இரு அணி குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இரு அணிகளில் உள்ள வீரர்களும், எதிரணி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

இந்திய பந்துவீச்சு சவால்: ஸ்மித்

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சு சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா சிறந்த வேகப்பந்து வீச்சை எட்டியுள்ளது. டியூக் பந்தில் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த வேக-சுழல் கூட்டணி இந்தியாவின் பலம். போட்டியில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இது இருக்கும் என்று கூறினார்.