ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களை மாற்றுவதற்கு கடந்த 2019ல் UIDAI கட்டுப்பாடு விதித்தது.

அதன்படி, ஆதாரில் உங்களது பெயரை 2 முறை மட்டுமே மாற்ற முடியும். பிறந்ததேதி, பாலினத்தை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஆனால், முகவரி, புகைப்படத்தை மாற்ற வரம்பு இல்லை. இந்த குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால், மாற்ற நினைப்போர் அருகே உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று அஞ்சல்(post) மூலம் விண்ணப்பிக்கலாம்.