
கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவாவில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுவாருகே செயல்பட்டு வரும் ஆதரவற்ற சிறுமிகளுக்கான அனாதை இல்லத்தில் இருந்துள்ளனர். 15,16, மற்றும் 18 வயதுடைய 3 சிறுமிகள் காணாமல் போன நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சிறுமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.