அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஆண்டுவிழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.