காதல் படத்தில் விருச்சுககான் எந்த சிறிய ரோலில் நடித்தவர் நடிகர் பாபு. இவருடைய காமெடி சீன் தான் பலரையும் கவர்ந்தது. இவர் அதற்குப்பின் தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய தாய் தந்தை உயிரிழந்துள்ளனர்.

இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான  இவரை சாலையில் சுற்றித்திரிந்த போது எடுத்த புகைப்படத்தை சிலர் எடுத்து வெளியிட அவருக்கு திரைத்துறையிலிருந்து அபி சரவணன் போன்றவர்கள் உதவி செய்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் ஒரு ஆட்டோவில் பரிதாபமாக கண் திறந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வர இதை பார்த்து ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.