இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவருடைய சகோதரர் அனில் அம்பானி. இவருடைய தந்தை அம்பானி மறைந்த பின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இருவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. இவர்களில் அனில் அம்பானி வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிர் ஜியோ நிறுவனத்தை தொடங்கிய முகேஷ் அம்பானி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு அனில் அம்பானிக்கு செபி 5 வருடங்கள் தடை விதித்துள்ளது. அதாவது நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதோடு அவருக்கு 25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.