துரைப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ் டூ படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி வயிற்று வலியால் துடித்துள்ளார். ஆசிரியர்கள் உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறிய நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போது மேடவாக்கத்தில் வேலை பார்த்து வரும் உறவுக்கார இளைஞர் ஆன பெரம்பலூரை சேர்ந்த ரிஷி என்ற 20 வயது நபர் காரணம் எனக் கூறியுள்ளார். அலைபாயுதே சினிமா பாணியில் மாணவியை தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கோவிலில் வைத்து தாலி கட்டியதும் அதன் பிறகு மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.