கேரள மாநிலம் அலுவா பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஜூலை மாதம் 28ஆம் தேதி கடத்தப்பட்டார். பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சிறுமியின் சடலம் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக வடமாநில தொழிலாளி அஷ்வக் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றவாளியான அஷ்வக் ஆலமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.