புத்தாண்டு தினமான இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது