
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனையடுத்து இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.