விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகிய 9 பேர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக்பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பூகம்பம் டாஸ்க்கில் தோற்றதால்  மூன்று பேர் வெளியேற உள்ள நிலையில் ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொம்காட்சியில் அர்ச்சனாவை விஷ்ணு சீண்டி உள்ளார். இதனால் கடுப்பாகிய அர்ச்சனா விஷ்ணு பூர்ணிமா இடையே இருக்கும் காதலை உடைத்துள்ளார்.