அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி கடந்த வாரம் பரப்புரையின் போது அருந்ததியினர் மக்கள் குறித்து சீமான் பேசியிருந்தார். இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.