பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி சென்றுவர ஏதுவாக ரோப் கார் சேவைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் மற்றும் படி வழி பாதையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது