இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என தெரிகிறது. கடந்த வாரம் கனமழையால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை சற்று கலக்கமடைய வைத்துள்ளது