தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு அலுவலக மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனுமதிச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்ப உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.