நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக Ex அமைச்சர் ஜெயக்குமார் . ‘அரசியல் என்பது கடல் மாதிரி. நீச்சல் தெரிந்தவர்கள் கரைசேர முடியும். குதித்து பார்க்கட்டும். சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சாதாரணமான ஒன்றென பலரும் நினைக்கும் அரசியல் எவ்வளவு கஷ்டமானதென கள ளத்திற்கு வந்தால் தெரியுமென  கருத்து தெரிவித்துள்ளார்.