தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த விழாவினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கல்வி விருது வழங்கும் விழாவினை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ஒரு நடிகரை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.

2 கிராம் பரிசு கொடுத்ததும் முட்டாள் பயலுங்களுக்கு அறிவு வேண்டாமா. பெற்று வளர்த்து ஆளாக்கி நாளை மற்றொருவர் மனைவியாக வாழக்கூடிய ஒரு பெண்ணை அம்மா, அப்பா மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எப்படி ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிக்க அனுமதிக்கலாம்.

இது ஈனப்பிறவி. இதுவா தமிழனின் கலாச்சாரம். விஜய் அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் நடித்திருந்தார்கள் என்றால் அவர்களை பாராட்டுங்கள். அதை விட்டுட்டு விஜய் அண்ணா என்று கூறிவிட்டு இதையெல்லாம் பெற்றோர்கள் அனுமதிக்காதீங்க. இதுவா தமிழ் சமூகம், இதுவா தமிழருடைய பாரம்பரியம். இதையா வீர குல பெண்கள் வாழ்ந்த தமிழ் சமூகம் என்கிறோம்.

எந்த கூத்தாடி பயலுக வீட்டு வாசலிலும் பேய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயல்களுக்கும் பிறந்தநாள் என்றால் என்ன.? அவர்களின் படம் 100 நாள் ஓடினால் என்ன.? ஓடிவிட்டால் என்ன.? அவனா உங்களுக்கு சோறு போட போகிறான்? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் போகிறான். அவனா பள்ளிக்கூடம் கட்டப் போகிறான் என்று கூறியுள்ளார்.

இது சர்ச்சையாக மாறிய நிலையில் விஜயின் ஆதரவாளர்கள் வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவரும் நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் தன்னுடைய இளமைக்காலம் முழுவதும் சினிமாவில் நடித்து பொருள் ஈட்டி விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.

இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த உடனே தலைமைச் செயலகத்திற்கு தான் செல்வேன் என்று கூறுகிறார். அவருக்கு உடனே முதல்வர் கனவு வரக்கூடாது. நடிகருக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டு குறிப்பாக இதனை பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என தான் நான் பெற்றோர்கள் பற்றி பேசினேன். காமராஜரை அவரோடு ஒப்பிட்டு பேசுவது சரி இல்லை என கூறினேன்.

நான் பெற்றோருக்கு சேவை செய்யுங்கள் என கூறிய நிலையில் நான் பேசியதை சில அரைவேக்காடுகள் தவறாக புரிந்து கொண்டு எங்கள் தளபதியை பற்றி பேசி உள்ளாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் பேசாத ஒன்றை பேசியதாக கூறி மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். இது சரியல்ல. ஒருவேளை விஜய்க்கு நான் பேசியதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் என்னை போல அவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசட்டும்.

அவர் பத்திரிக்கையாளர்களை அழைத்த கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இப்படி மற்றவர்களை வைத்து வீடியோ போடுவதும் பேச வைப்பதும் வளர்ந்து வரும் ஒரு கட்சிக்கு நல்லதல்ல. மேலும் உடனே விஜய் இதனை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.