உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோவில் திறப்பு விழாவை நடத்த உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மத தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு ஜனவரி மாதமே அயோத்தி ராமர் கோவிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.