அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளப் போவதாக இந்தியாவில் தலைமுறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்வார் என்று கைலாசம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.