அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறை வழங்கியதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவருடைய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.