அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து பல மாதங்களாக சிறையில் இருக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு உடல்நிலையில் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அமைச்சருக்கு இன்று சில பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் மேலும் 2 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, கால் வலி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். பரிசோதனைக்கு பின்பு சிகிச்சை தொடர்பாக முழு மருத்துவ அறிக்கை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.