
உள்துறை மந்திரி அமைச்சர் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார். அதன் பிறகு திமுகவை நூறு சதவீதம் தோல்வியடைந்த அரசு என விமர்சித்த அவர் தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை என கடுமையாக சாடினார்.
இந்நிலையில் மத்திய மந்திரி எல். முருகன் திமுக அரசை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், மாண்புமிகு உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் ஒட்டுமொத்த தமிழகமும் அரண்டு போயிருக்கிறது. எத்தனை ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெளிவாக தெரிகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூறும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாட்டில் பதிலடி கொடுக்கப்படும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார்கள். மாண்புமிகு உள்துறை மந்திரி சொன்னபடி திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை பற்றி யோசிக்க வேண்டும். மேலும் தமிழக பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிந்திப்போம் களப்பணி ஆற்றுவோம் என்று கூறினார்.