அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஓபிஎஸ் முழுமையாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பொதுச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் படத்தை இணைத்து தேனியில் ஒட்டி உள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், கழகத் தொண்டர்களே ஒன்றிணைவோம் வாருங்கள், ஒற்றுமையே வலிமை, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவை மீட்பதற்காக விரைவில் அமமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.