கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஷ் நாயக் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக மல்லேஷ் நாயக் வரதட்சனை கேட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபத்தில் மதுரா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்ற மல்லேஷ் தனது மகனின் கண் முன்னே மதுரா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் படுகாயமடைந்த மதுரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மல்லேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.