
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட புஷ்பா படத்தை சுகுமார் இயக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக பகத் பாஷில் நடித்திருந்தார்.
தற்போது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , படப்பிடிப்பில் பகத் பாஸில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் பகத் பாசில் ஹைதராபாத் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 8-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு டீசர் வீடியோவின் க்ளிம்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.