இந்தியாவில் 78-வது சுதந்திர தின விழா ‌ ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின்போது சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கும் நிலையில் அதற்கு தேர்வான காவல் அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகள் தேர்வாகியுள்ளனர்.

இதில் 2 பேருக்கு மிகச் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கான ஜனாதிபதி விருதும், 21 பேருக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருதும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் குறிப்பாக ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார், ஏஎஸ்பி ஸ்டீபன், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி மனோகரன் மேலும் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உட்பட 23 பேருக்கு வழங்கப்பட உள்ளது.