பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். அதாவது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக 51 ஆயிரம் பேர் ‌ வேலைகளில் சேர்ந்துள்ளனர். இவர்களுடன் இன்று காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் அப்போது 51 ஆயிரம் பேருக்கும் பணி நியமன ஆணையை மொத்தமாக வழங்கினார்.

அதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது, இந்த பண்டிகை சூழலில் தற்போது 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கானோருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று கூறினார்.